சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனி நன்கொடையாக வழங்கியுள்ளது.
கோவை: வால்பாறையில் உள்ள சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனி வழங்கியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனியின் சேக்கல்முடி, முருகாளி, கல்யாண பந்தல், பாரளை, அய்யர்பாடி ஆகிய ஐந்து தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனியின் சேக்கல் முடி குரூப் சார்பில் சோலையாறு அணை பகுதியில் உள்ள சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டில், பீரோ, மெத்தை, அலுவலகத்திற்கு தேவையான பிரிண்டர், டேபிள், சேர், எடை பார்க்கும் கருவி, குளுக்கோ லேப் மெஷின், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை வால்பாறையில் உள்ள சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேக்கல் முடி குரூப் பொதுமேலாளர் கே பாலாஜி, உதவி பொது மேலாளர் போப்பி, P & I R மேலாளர் முருகாளி டேவிட்கிங்ஸ்லே, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மணன் அவர்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனியின் சேக்கல்முடி, முருகாளி, கல்யாண பந்தல், பாரளை, அய்யர்பாடி ஆகிய ஐந்து தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பாரி அக்ரோ லிமிடெட் கம்பெனியின் சேக்கல் முடி குரூப் சார்பில் சோலையாறு அணை பகுதியில் உள்ள சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டில், பீரோ, மெத்தை, அலுவலகத்திற்கு தேவையான பிரிண்டர், டேபிள், சேர், எடை பார்க்கும் கருவி, குளுக்கோ லேப் மெஷின், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை வால்பாறையில் உள்ள சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேக்கல் முடி குரூப் பொதுமேலாளர் கே பாலாஜி, உதவி பொது மேலாளர் போப்பி, P & I R மேலாளர் முருகாளி டேவிட்கிங்ஸ்லே, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மணன் அவர்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.