அவதூறு வழக்கு; முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஆஜரானார்.


திருப்பூர்: அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியாக, 2016ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.



இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....