கோவையில் மத்திய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்; விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.கவினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு!

மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம், 144 தடை உத்தரவை மீறி நடத்தியதாக திமுகவினரைச் சேர்ந்த 250 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: மத்தியில் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுவருகிறது.

குறிப்பாக விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது போன்றவை நடைமுறைப்படுத்துவதற்கு பாஜக அரசு தொடர்ச்சி முயற்சித்துவருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று திமுக மற்றும் தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கோவையைப் பொறுத்தவரை மாநகர் காட்டூர், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் தடை உத்தரவை மீறி நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 250 பேர் 144 தடை உத்தரவை மீறுதல் மற்றும் தொற்று நோய் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...