கோவை மாநகராட்சியின் பொறுப்பு துணை ஆணையராக பதவி வகித்த விமல்ராஜ் சில நிர்வாக காரணங்களால் நெல்லைக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய கோவை துணை ஆணையராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: தமிழக அரசு தலைமைச்செயலாளர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி துணை ஆணையர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வகித்த விமல்ராஜ் என்பவர் நிர்வாக காரணங்களால் கடந்த 17 ஆம் தேதி அப்பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் சென்னையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொதுமேலாளராக மருத்துவர் ஷர்மிளா கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த விமல்ராஜ் திருநெல்வேலி, சிப்காட் பிரிவு, சூரிய மின்சக்தி கலன் அமைப்பின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதோடு கோவை மாவட்ட வருவாய் அலுவலர்(முத்திரைத்தாள்) நர்மதாதேவி, சென்னை, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் பொதுமேலாளராகவும், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) டி.ஆர்.டி.சாந்தி மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறையின் தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறையின் தனி அலுவலராகப் பணியாற்றி வந்த குமரேஸ்வரன், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மண்டல மேலாளர் பிரசன்னராமசாமி, சென்னை பெருநகரம் வருவாய் அலுவலர்( நிலம் மற்றும் எஸ்டேட்) பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்( நிலம் எடுப்பு) பொறுப்பு வகித்த அசோகன், கள்ளக்குறிச்சி, கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் மேலாண்மை இயக்குநராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக பொறுப்பு வகித்த விமல்ராஜ் என்பவர் நிர்வாக காரணங்களால் கடந்த 17 ஆம் தேதி அப்பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் சென்னையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொதுமேலாளராக மருத்துவர் ஷர்மிளா கோவை மாநகராட்சியின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த விமல்ராஜ் திருநெல்வேலி, சிப்காட் பிரிவு, சூரிய மின்சக்தி கலன் அமைப்பின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதோடு கோவை மாவட்ட வருவாய் அலுவலர்(முத்திரைத்தாள்) நர்மதாதேவி, சென்னை, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் பொதுமேலாளராகவும், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) டி.ஆர்.டி.சாந்தி மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறையின் தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, மதுரை இந்து சமய அறநிலையங்கள் துறையின் தனி அலுவலராகப் பணியாற்றி வந்த குமரேஸ்வரன், கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நில எடுப்பு) பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மண்டல மேலாளர் பிரசன்னராமசாமி, சென்னை பெருநகரம் வருவாய் அலுவலர்( நிலம் மற்றும் எஸ்டேட்) பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்( நிலம் எடுப்பு) பொறுப்பு வகித்த அசோகன், கள்ளக்குறிச்சி, கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் மேலாண்மை இயக்குநராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.