பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் - ரயில்வே மேலாளரிடம் திமுகவினர் கோரிக்கை..!

மேலும் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


கோவை: பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில்வே மேலாளரிடம் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - போத்தனூர் இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மின்சார ரயில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, கிணத்துக்கடவு ரயில்நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்த சேலம் மற்றும் பாலக்காடு கோட்ட மேலாளரிடம் திமுக சார்பில் முன்னாள் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவரும், மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினருமான கதிர்வேல் தலைமையில் திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.



அந்த மனுவில், பொள்ளாச்சி - போத்தனூர் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்தது அடுத்து கிணத்துக்கடவு வழியாக ஏற்கனவே இயக்கிக் கொண்டிருந்த கோவை - ராமேஸ்வரம், கோவை - செங்கோட்டை, கோவை -தூத்துக்குடி, கோவை - திண்டுக்கல் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், மேலும் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், அண்ணநகர் ஈஸ்வரன், கிணவை கணேஷ், தினேஷ்குமார், லட்சுமணன், மணிகண்டன், ரமேஷ்குமார், முரளி, காளிமுத்து மற்றும் வியாபார சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...