கிணத்துக்கடவில் ஆட்டோ ஓட்டுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.!!

கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் ஆட்டோ ஓட்டுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் பரமசிவம்(35), ஆட்டோ ஓட்டுநரான இவர், கிணத்துக்கடவு பஸ் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

பரமசிவம் ஆட்டோ ஸ்டேண்டில் நின்றபோது அங்கு வந்த கொண்டம்பட்டி சேர்ந்த காவியபிரபு (21) என்ற வாலிபர் பரமசிவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது இடத்தில் வைத்து கெட்ட வார்த்தையில் திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, பரமசிவம் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப் பதிவு செய்து பரமசிவத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...