கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ. 48 கோடி செலவில் வாலாங்குளத்தில் நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பணிகளை டெல்லியில் இருந்து வந்த குழுவினர் ஆய்வு.
கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில், குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடி ரூபாய்க்கு வாலாங்குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை வாலாங்குளத்தில்நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இப்பணிகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி ஆணையருடன்இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில், குளக்கரைகளை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.48 கோடி ரூபாய்க்கு வாலாங்குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை வாலாங்குளத்தில்நடைபயிற்சி பாதை, உணவு விடுதி, பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இப்பணிகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி ஆணையருடன்இணைந்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.