காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு மதுரைக்கு 2 அரசுப் பேருந்துகள் இயக்கம்.

கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டம் அரசு பேருந்து சார்பாக கோவை டவுன் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கும் 10.45 மணிக்கும் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு நேரடியாக செல்கிறது.


கோவை: எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், வார கடைசி நாட்களில் கூடுதல் பரபரப்பாக காணப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் டவுன் பேருந்து நிலையத்தில் கூடுவதும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள், கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சிங்காநல்லூர் செல்ல பேருந்து பிடித்து அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். 

இந்த நிலையில், கொரோனா தளர்வுகளுக்கு பின், வெள்ளி மாலை விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு வரப்பிரசாதமாக, கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டம் அரசு பேருந்து சார்பாக கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கும் 10.45 மணிக்கும் இரண்டு பேருந்துகள் மதுரைக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள். 

கோவையில் இருந்து சரியாக 10 மணிக்கு புறப்படும் பேருந்து 3 மணி அளவில் மதுரை ஆரப்பாளையம் சென்றடையும். 

ஆதலால், இனிதென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கையில் கனத்த பேக்குகளை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிலையமாக அலையாமல் கோவை காந்திபுரம் வந்துவிட்டால் டவுன் பேருந்து நிலையத்துக்குள் இருந்து மதுரைக்கு இலகுவாக செல்லலாம். 

இந்த கூடுதல் பேருந்து சேவையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...