கோவை ஐ.என்.எஸ் அக்ரானி 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்..!

பல ஆண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்த அனைத்து வீரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ரானி 1965ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டது. அக்ரானி கடற்படையின் முதன்மையான பயிற்சி நிறுவனமாகும். அதன் தொடக்கத்திலிருந்து, ஐ.என்.எஸ் அக்ரானி கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கு தரமான தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சியை வழங்கி வருகிறது.

மூத்த மாலுமிகள் ஒரு வலுவான கடற்படையின் அடித்தளத்தை உருவாக்குகிறார்கள் மற்றும் இவர்களை சீர்படுத்துவதிலும் தலைவராக மாற்றுவதிலும் ஐ.என்.எஸ் அக்ரானி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பயிற்சி அவர்களை கரை மற்றும் மிதக்கும் உயர் பொறுப்புகளையும், முக்கிய பொறுப்புகளையும் சுமக்க உதவுகிறது.

இந்த நிலையில், இன்று கடற்படை மற்றும் தேசத்திற்கு ஒரே மாதிரியான 56 ஆண்டுகால நட்சத்திர சிறப்பை நினைவுகூறும் வகையில் பிரிவின் கட்டளை அதிகாரி சி.எம்.டி அசோக் ராய் வி.எஸ்.எம் அவர்களால் ஆண்டுவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்வின் போது ஆண்டுகள் பல பணிபுரிந்து சாதனைப் படைத்த அனைத்து வீரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இத்தகைய பெருமை பொருந்திய ஆண்களும், பெண்களும் தேசத்துக்கும் கடற்படைக்கும் தங்கள் சேவையை இடைவிடாது உறுதியுடனும் சீரிய செயல்களுடனும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...