கோவை ஐ.என்.எஸ் அக்ரானி 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்..!

பல ஆண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்த அனைத்து வீரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ரானி 1965ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டது. அக்ரானி கடற்படையின் முதன்மையான பயிற்சி நிறுவனமாகும். அதன் தொடக்கத்திலிருந்து, ஐ.என்.எஸ் அக்ரானி கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கு தரமான தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சியை வழங்கி வருகிறது.

மூத்த மாலுமிகள் ஒரு வலுவான கடற்படையின் அடித்தளத்தை உருவாக்குகிறார்கள் மற்றும் இவர்களை சீர்படுத்துவதிலும் தலைவராக மாற்றுவதிலும் ஐ.என்.எஸ் அக்ரானி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பயிற்சி அவர்களை கரை மற்றும் மிதக்கும் உயர் பொறுப்புகளையும், முக்கிய பொறுப்புகளையும் சுமக்க உதவுகிறது.

இந்த நிலையில், இன்று கடற்படை மற்றும் தேசத்திற்கு ஒரே மாதிரியான 56 ஆண்டுகால நட்சத்திர சிறப்பை நினைவுகூறும் வகையில் பிரிவின் கட்டளை அதிகாரி சி.எம்.டி அசோக் ராய் வி.எஸ்.எம் அவர்களால் ஆண்டுவிழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்வின் போது ஆண்டுகள் பல பணிபுரிந்து சாதனைப் படைத்த அனைத்து வீரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இத்தகைய பெருமை பொருந்திய ஆண்களும், பெண்களும் தேசத்துக்கும் கடற்படைக்கும் தங்கள் சேவையை இடைவிடாது உறுதியுடனும் சீரிய செயல்களுடனும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...