கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் உத்தரவின் பேரில், கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் உத்தரவின் பேரில், கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கணபதி சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் என்பவருடைய மகன் தினேஷ்(27), இவர் கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கோவில்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், துடியலூர் காவல் நிலையம் சார்பாக மாவட்ட எஸ்.பி செல்வனாக ரத்தினத்திற்கு தினேஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டு அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள கைதியிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
கோவை கணபதி சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் என்பவருடைய மகன் தினேஷ்(27), இவர் கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கோவில்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், துடியலூர் காவல் நிலையம் சார்பாக மாவட்ட எஸ்.பி செல்வனாக ரத்தினத்திற்கு தினேஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டு அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள கைதியிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.