கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட டவுன் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மெர்குரி எல்.இ.டி பல்ப் மதிய நேரம் வரை அணைக்கப்படாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் ஒன்று டவுன் பேருந்து நிலையமாகும். எப்பொழுதுமே பரபரப்பாக செயல்படக்கூடிய இந்த பேருந்து நிலையத்தின் பேருந்து உள்ளே செல்லும் வழியில் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட விலை உயர்ந்த பிரகாசமான வெள்ளை நிற எல்.இ.டி மெர்குரி பல்புகள் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை தொடங்கி பகல் 12 மணியைத் தாண்டி பிரகாசமாக ஒளி வீசி எரிந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி பணியாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனவும் உடனடியாக எல்.இ.டி பல்புகள் இயக்குவதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் ஒன்று டவுன் பேருந்து நிலையமாகும். எப்பொழுதுமே பரபரப்பாக செயல்படக்கூடிய இந்த பேருந்து நிலையத்தின் பேருந்து உள்ளே செல்லும் வழியில் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட விலை உயர்ந்த பிரகாசமான வெள்ளை நிற எல்.இ.டி மெர்குரி பல்புகள் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை தொடங்கி பகல் 12 மணியைத் தாண்டி பிரகாசமாக ஒளி வீசி எரிந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி பணியாளர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனவும் உடனடியாக எல்.இ.டி பல்புகள் இயக்குவதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.