கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் பணியில் இருந்து திடீர் விடுவிப்பு...! - ஆணையர் தகவல்

கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த விமல்ராஜ் இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த விமல்ராஜ் இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணி புரிந்த மதுராந்தகி கடந்த ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு) விமல்ராஜ் கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஜூலை 14ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் துணை ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், துணை ஆணையாளர் பதவியில் இருந்து திடீரென்று விடுவிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரியும் விமல்ராஜ் நிர்வாக காரணங்களுக்காக இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...