கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் பணியில் இருந்து திடீர் விடுவிப்பு...! - ஆணையர் தகவல்

கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த விமல்ராஜ் இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரிந்து வந்த விமல்ராஜ் இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணி புரிந்த மதுராந்தகி கடந்த ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு) விமல்ராஜ் கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஜூலை 14ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் துணை ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், துணை ஆணையாளர் பதவியில் இருந்து திடீரென்று விடுவிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக பணிபுரியும் விமல்ராஜ் நிர்வாக காரணங்களுக்காக இன்று முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...