பெரியார் பிறந்தநாள்: கோவை மாநகராட்சியில்‌ இன்று 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்பு.!!

மாநகராட்சியில்‌ தந்தை பெரியாரின்‌ 143-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ சமூக நீதி நாள்‌ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ தந்தை பெரியாரின்‌ 143-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ சமூக நீதி நாள்‌ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ தந்‌தை பெரியாரின்‌ 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள்‌ உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌, அனைத்து அலுவலார்களும்‌, பணியாளார்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி இன்று (17.09.2021) நடைபெற்றது.

கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்றப்பட்டது,

“பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌ என்ற அன்பு நெறியும்‌ யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளீர்‌ என்ற பண்பு நெறியும்‌ எனது வாழ்வியல்‌ வழிமுறையாகக்‌ கடைபிடிப்பேன்‌!!

சுயமரியாதை ஆளுமைத்‌ திறனும்‌ - பகுத்தறிவுக்‌ கூர்மைப்‌ பார்வையும்‌ கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள்‌ அமையும்‌!

சமத்துவம்‌, சகோரத்துவம்‌, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான்‌ ஒப்படைத்துக்‌ கொள்வேன்‌!

மானுடப்‌ பற்றும்‌ மனிதாபிமானமும்‌ ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்‌!

சமூக நீதியையே அடித்தளமாகக்‌ கொண்ட சமுதாயம்‌ அமைக்கும்‌ எனது பயணம்‌ தொடர இந்த நாளில்‌ உறுதியேற்கிறேன்‌!.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளாா்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ அனைவரும்‌ ஏற்றுக்கொண்டனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ கு.விமல்ராஜ்‌, மற்றும்‌ மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலா்கள்‌, பணியாளர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...