கோவை நரசீபுரம் பகுதியில் காட்டு யானை மிதித்து விவசாயி பலி..!

இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உடனடி நிவாரண தொகை ரூ.50,000 இன்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை நரசீபுரம் பகுதியில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசீபுரம் ஒதுக்குக்காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை சின்னசாமி ‌என்ற விவசாயியை மிதித்ததில் வலது கால் மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை பணியாளர்கள், அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதையடுத்து, சின்னசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, வனப்பணியாளர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் உடனடி நிவாரண தொகை ரூ.50,000/- இன்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...