வால்பாறையில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதி நாள் விழா கொண்டாட்டம்..!

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி அளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


கோவை: வால்பாறையில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதி நாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழாவை சமூக நீதி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.



வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் விழாவில் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமை தாங்கினார். விழாவில் ஈ.கா. பொன்னுசாமி தந்தை பெரியாரைப் பற்றி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மையும் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி அளிக்கிறேன் என இன்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி வர்த்தக அணி இணைச் செயலாளர் JBR பாஸ்கர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வம், வழக்கறிஞர் வினோத்குமார் ஈகா பொன்னுசாமி, கூட்டணி கட்சியினர் கம்யூனிஸ்ட் பெரியசாமி, தனபாண்டியன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...