வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்..!

வால்பாறை நீதிமன்றத்தில் உள்ள வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் பொதுமக்கள் அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.



இதையடுத்து, முகாமில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் விசுவநாதன், தற்போதைய கொரோனா காலத்தில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தங்களுடைய சட்ட உதவிக்கு வால்பாறை நீதிமன்றத்தில் உள்ள வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி.ஏ. சுரேஷ் நன்றி தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள், எம். முத்துசாமி விஸ்வநாதன் மற்றும் தன்னார்வலர்கள் தாமரைக்கண்ணன், கே முனியாண்டி, டி கே சுரேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...