வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்..!

வால்பாறை நீதிமன்றத்தில் உள்ள வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் பொதுமக்கள் அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.



இதையடுத்து, முகாமில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் விசுவநாதன், தற்போதைய கொரோனா காலத்தில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தங்களுடைய சட்ட உதவிக்கு வால்பாறை நீதிமன்றத்தில் உள்ள வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுவிடம் அணுகி தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி.ஏ. சுரேஷ் நன்றி தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள், எம். முத்துசாமி விஸ்வநாதன் மற்றும் தன்னார்வலர்கள் தாமரைக்கண்ணன், கே முனியாண்டி, டி கே சுரேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...