போதையில் தண்ணீருக்குப்பதில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த வாலிபர் உயிரிழப்பு; கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

கிணத்துக்கடவு அருகே மதுப்போதையில் தண்ணீர் என நினைத்துப் பாட்டிலில் ஊற்றி வைத்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவரடிப்பாளையம் பகுதியில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்று உள்ளது.

இங்கு திருப்பூர்மாவட்டம் கண்ணாடிபுத்தூரைச்சேர்ந்த 29 வயதான ராஜேஷ்குமார் கூலித்தொழிலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 ஆம் இரவு மதுப்போதையில் இருந்தப்போது, தண்ணீர் தாகம் எடுத்த நிலையில், தண்ணீர் பாட்டிலில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக்குடித்தாகக் கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்க நிலையில் இருந்த ராஜேஷ்குமாரை, கோழிப்பண்ணை உரிமையாளர் நாராயணசாமி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த ராஜேஷ்குமாரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...