பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்; கோவை மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

பீமா கோரேகான் வன்முறையில் ஈடுபட்டதாக பொய்யான வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறத்தினர்.



கோவை: கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200 ஆண்டு நினைவு நிகழ்ச்சி பீமா கொரேகானில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போது வன்முறை சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவம் நாடு முழுவதும் சமூக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.



இந்நிலையில் தான் வன்முறை சம்பவத்திற்குத் தொடர்பில்லாத பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று மாலை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சி.பி.எம், சிபி.ஐ, தபெதிக, ஆதிதமிழர் பேரவை, தமிழ்புலிகள், எஸ்.டி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இதில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை நீக்க கோரியும், பீமா கோரெகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டவர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும் பீமா கோரேகான் பகுதியில் அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் வருகின்ற நிலையில் அதை தடுக்கவே இதுப்போன்ற கைது நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...