பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்; கோவை மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

பீமா கோரேகான் வன்முறையில் ஈடுபட்டதாக பொய்யான வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறத்தினர்.



கோவை: கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200 ஆண்டு நினைவு நிகழ்ச்சி பீமா கொரேகானில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போது வன்முறை சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவம் நாடு முழுவதும் சமூக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.



இந்நிலையில் தான் வன்முறை சம்பவத்திற்குத் தொடர்பில்லாத பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று மாலை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சி.பி.எம், சிபி.ஐ, தபெதிக, ஆதிதமிழர் பேரவை, தமிழ்புலிகள், எஸ்.டி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இதில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை நீக்க கோரியும், பீமா கோரெகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டவர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும் பீமா கோரேகான் பகுதியில் அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் வருகின்ற நிலையில் அதை தடுக்கவே இதுப்போன்ற கைது நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...