பொள்ளாச்சி பாலியல் வழக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை.. 9-குற்றவாளிகளுக்குக் காவல் நீடிப்பு.!!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் 9-பேருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளில் 9-பேருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையின் போது ஹாரன் பால், பாபு, அதிமுக முன்னாள் நிர்வாகி அருளானந்தம், அருண்குமார், ஆகிய 4-பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி குற்றப்பத்திரிக்கை ஆன்லைன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம்சாட்டப்பட்ட 9-பேரும் நேரடியாக ஆஜராகவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை நீடித்து நீதிபதி வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...