கோவை மஸ்தூர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம்..!

கோவை: கோவை மஸ்தூர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மஸ்தூர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.



தற்போது நிலவி வரும் கடுமையான பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளர் பிரிவு தலைவர் ஏ.சி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன் விளக்க உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, மக்கள் தொகைக்கு ஏற்ப பத்தாண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சகல வசதிகளுடன் வீடுகளை கட்டிக் கொடுப்பது, பத்தாண்டுகளாக பணியாளர் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு செலக்சன் கிரேடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பரமசிவம், பண்ணாரி, பாபு, ராஜேந்திரன், மணி, ஐயப்பன், சுரேஷ், ராஜமணி, ராணி, பரமேஸ்வரி, ஜோதி உள்ளிட்ட பாரதி மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...