கோவை மஸ்தூர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம்..!

கோவை: கோவை மஸ்தூர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மஸ்தூர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.



தற்போது நிலவி வரும் கடுமையான பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளர் பிரிவு தலைவர் ஏ.சி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன் விளக்க உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, மக்கள் தொகைக்கு ஏற்ப பத்தாண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சகல வசதிகளுடன் வீடுகளை கட்டிக் கொடுப்பது, பத்தாண்டுகளாக பணியாளர் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு செலக்சன் கிரேடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பரமசிவம், பண்ணாரி, பாபு, ராஜேந்திரன், மணி, ஐயப்பன், சுரேஷ், ராஜமணி, ராணி, பரமேஸ்வரி, ஜோதி உள்ளிட்ட பாரதி மஸ்தூர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...