கோவை: கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தினமும் 10 மாணவர்கள் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தினமும் 10 மாணவர்கள் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவ, மாணவியர் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் யாருக்கும் தொற்று பரவல் கண்டறியப்படவில்லை. தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்குச் சளி, காய்ச்சல் மற்றும் பிற உடல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும், மாநகராட்சி சுகாதார துறையினர் சார்பில் நாள்தோறும் ஒவ்வொரு பள்ளிகள் 5 முதல் 10 மாணவர்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவ, மாணவியர் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் யாருக்கும் தொற்று பரவல் கண்டறியப்படவில்லை. தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்குச் சளி, காய்ச்சல் மற்றும் பிற உடல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும், மாநகராட்சி சுகாதார துறையினர் சார்பில் நாள்தோறும் ஒவ்வொரு பள்ளிகள் 5 முதல் 10 மாணவர்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.