பொள்ளாச்சி அருகே பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு.!! காசி பட்டணம் தி.மு.க கிளைச் செயலாளர் காளியப்பன் கைது.!!

கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த காசி பட்டணம் தி.மு.க கிளைச் செயலாளர் காளியப்பன் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த காசி பட்டணம் தி.மு.க கிளைச் செயலாளர் காளியப்பன் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காசி பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், வயது 45. இவர் தி.மு.க கிளை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

இவர் பாதாளச் சாக்கடை போன்ற திட்டப் பணிகளுக்கு ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி காளியப்பன் நாட்டுக்கல் பாளையம் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.

அங்குக் கணவரை இழந்து தனியாக வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அவரின் கையை பிடித்து இழுத்துத் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் பொதுமக்கள் வருவதற்குள் தப்பி ஓடி விட்டார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்துத் தலைமறைவாக இருந்த காளியப்பனைக் கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை பொள்ளாச்சி ஜே.எம் எண் 2- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...