வராத நொய்யல் ஆற்று நீருக்கு, அதில் வரும் கழிவுநீரை உபரிநீர் என்று கூறுவது சரியாகாது. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அரசுக்கு ஆலோசனை.!!

கோவை: வராத நொய்யல் ஆற்று நீருக்கு, அதில் வரும் கழிவுநீரை உபரிநீர் என்று கூறுவது சரியாகாது என முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அரசுக்கு ஆலோசனை கூறினார்.


கோவை: வராத நொய்யல் ஆற்று நீருக்கு, அதில் வரும் கழிவுநீரை உபரிநீர் என்று கூறுவது சரியாகாது என முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அரசுக்கு ஆலோசனை கூறினார்.

நொய்யல் ஆறு கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக பாயக்கூடிய நதி, போதுமான மழை இல்லாததால் நொய்யல் ஆற்றுப் பகுதி குளம், குட்டைகள், அணைகள், காய்ந்து குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டு உள்ளது.

நொய்யல் ஆற்றுப் பாசனத்திற்கு ஆண்டுதோறும் வரி கட்டும் விவசாயிகளின் அசாதாரண சூழ்நிலையை புரிந்து குளம், குட்டை, அணைகளுக்கு நீர் வந்தால் போதும் குடிநீர் ஆதாரமும் கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்கும் என்று நல்ல எண்ணத்துடன் கோவை மாநகராட்சி கழிவு நீரை குளம் குட்டைகளில் நிரப்பி அப்பகுதியில் வாழ்கின்றனர்.

2001- 2006 நான் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டபோது முப்பது ஆண்டுகளுக்கு மேல் காய்ந்த குளம் குட்டைகளுக்கு மாநகர கழிவு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர், கால்நடை குடிநீருக்கும் பயன்பெறும் வகையில்,

கோவை மாவட்ட ஆட்சியர் எத்தனை நாட்கள் எந்த குளத்திற்கு எவ்வளவு நீரை நிரப்பலாம் என்று உத்தரவிட்டு இன்றுவரை இருக்கும் நீரை பகிர்ந்து அதன் மூலம் குடிநீர் ஆதாரம் கிடைத்து வருகிறது.

நொய்யல் ஆற்று நீர் குளம் குட்டைகளை நிரப்பவே போதுமானதாக இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில், நொய்யல் ஆற்று சட்ட விதிகளுக்குப் புறம்பாக நொய்யல் ஆற்றில் வராத நீருக்கு உபரி நீர் என்று கூறி எடுக்க முயற்சிப்பது தவறாகும்.

மேலும் உபரி நீர் கொண்டு செல்ல கேட்கும் பகுதியில் அரசின் வாய்க்கால் பாசனம் உள்ளது.

இதில் இருக்கும் பாசனத்தை விரிவுபடுத்தி கூடுதல் தண்ணீரை பெற முயற்சிப்பதை விட்டுவிட்டு குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளம் குட்டையில் இருந்து பயன்படுத்தும் நீரை எடுக்க முயற்சிப்பது தவறான செயல்.

வசதியானவர் தங்கள் சுய தேவைக்கு சமூக அமைப்புகள் என்ற பெயரில் முறைகேடாக வசூல் செய்துகொண்டு அரசு நீர் விநியோகத்தை திசை திருப்பும் செயலாகும்.

இதற்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் இப்பகுதி மக்களுக்கான நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...