கோவை: தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தற்கு பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.
கோவை: தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தற்கு பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதியாகக் கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததற்கு திமுகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறிச்சி பகுதியில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்குக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலச் செயலாளர் உமாபதி, குறிச்சி பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் நாகராஜன், திராவிட கழகம் சார்பில் சிற்றரசு, சந்திரசேகர், மகேந்திரன், மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதியாகக் கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததற்கு திமுகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறிச்சி பகுதியில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்குக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் குறிச்சி பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலச் செயலாளர் உமாபதி, குறிச்சி பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் நாகராஜன், திராவிட கழகம் சார்பில் சிற்றரசு, சந்திரசேகர், மகேந்திரன், மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.