விலைமதிப்பில்லா உயிரை விளையாட்டாக எண்ணாதீர்கள்.!! கோவை நீர் நிலைகளில் குளிக்க, துவைக்க செல்லும் பொது மக்களுக்கு மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!!

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அன்பான அறிவுரை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அன்பான அறிவுரை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலை படுகைகளில் அபாயகரமான மற்றும் குளிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விளையாட்டுத்தனமாகவும், கேளிக்கையாகவும் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும், ஆபத்தை உணராமலும் குளிக்கச் சென்று தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு அருவி, ஆறு, கால்வாய், குளம், குட்டை, கிணறு மற்றும் அணை போன்ற நீர் நிலைகளில் அபாயத்தை உணராமலும் விளையாட்டுத்தனமாகவும் குளிப்பதற்காகச் சென்று (2019-100 பேர், 2020-94 பேர், 2021-61 பேர்) தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.



மேற்படி அபாயகரமான பகுதி மற்றும் குளிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது விலை மதிப்பற்ற உயிரைக் காப்பதற்காகக் கோவை மாவட்ட காவல்துறையினருக்கு அப்பகுதியில், அதிகமாக ரோந்து பணியில் (Beat Patrol)ஈடுபடவும் மற்றும் எச்சரிக்கை பதுகைகள் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

விலை மதிப்பற்ற உயிரை விளையாட்டாக எண்ணாதீர்!!!

அபாயகரமான பகுதியை அறிவீர்!!!

விலைமதிப்பற்ற உயிரைக் காப்பீர்!!!

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...