வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு- மக்கள் அச்சம்.!!

கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.



இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத்தொடர்ந்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருப்பினும், சிறுத்தைகள் கூண்டில் சிக்காமல் வனத்துறைக்குப் போக்கு காட்டி வருகின்றது. இந்நிலையில், வால்பாறையின் பேருந்து நிலையம் உள்ள காந்தி சிலை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் எதிரில் 3-சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந் ஐஎப்எஸ்.உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆணையாளர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா வச்சரகர்கள், ஜெயச்சந்திரன், மணிகன்டன், வனவர்கள் வனத்துறையினர் சிறுத்தைகள் சில தினங்களுக்கு முன் நடமாடிய அரசு ஆரம்பச் சுகாதார நிலைய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், வால்பாறை மத்திய பகுதியான நகைக் கடை வீதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் தபால் நிலையம், காவல் நிலையம் தொலைப்பேசி நிலையம் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி மற்றும் மார்க்கெட் வளாகங்கள் குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில், இரவு 10-மணி முதல் அதிகாலை 3-மணி வரை சிறுத்தைகள் நடமாட்டம் தென்படுவது வழக்கமாக உள்ளது. வால்பாறை நகரின் பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...