கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத்தொடர்ந்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும், சிறுத்தைகள் கூண்டில் சிக்காமல் வனத்துறைக்குப் போக்கு காட்டி வருகின்றது. இந்நிலையில், வால்பாறையின் பேருந்து நிலையம் உள்ள காந்தி சிலை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் எதிரில் 3-சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந் ஐஎப்எஸ்.உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆணையாளர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா வச்சரகர்கள், ஜெயச்சந்திரன், மணிகன்டன், வனவர்கள் வனத்துறையினர் சிறுத்தைகள் சில தினங்களுக்கு முன் நடமாடிய அரசு ஆரம்பச் சுகாதார நிலைய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், வால்பாறை மத்திய பகுதியான நகைக் கடை வீதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் தபால் நிலையம், காவல் நிலையம் தொலைப்பேசி நிலையம் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி மற்றும் மார்க்கெட் வளாகங்கள் குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், இரவு 10-மணி முதல் அதிகாலை 3-மணி வரை சிறுத்தைகள் நடமாட்டம் தென்படுவது வழக்கமாக உள்ளது. வால்பாறை நகரின் பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத்தொடர்ந்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும், சிறுத்தைகள் கூண்டில் சிக்காமல் வனத்துறைக்குப் போக்கு காட்டி வருகின்றது. இந்நிலையில், வால்பாறையின் பேருந்து நிலையம் உள்ள காந்தி சிலை அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் எதிரில் 3-சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந் ஐஎப்எஸ்.உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆணையாளர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா வச்சரகர்கள், ஜெயச்சந்திரன், மணிகன்டன், வனவர்கள் வனத்துறையினர் சிறுத்தைகள் சில தினங்களுக்கு முன் நடமாடிய அரசு ஆரம்பச் சுகாதார நிலைய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், வால்பாறை மத்திய பகுதியான நகைக் கடை வீதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் தபால் நிலையம், காவல் நிலையம் தொலைப்பேசி நிலையம் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி மற்றும் மார்க்கெட் வளாகங்கள் குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், இரவு 10-மணி முதல் அதிகாலை 3-மணி வரை சிறுத்தைகள் நடமாட்டம் தென்படுவது வழக்கமாக உள்ளது. வால்பாறை நகரின் பல பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.