கோவை: தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.
கோவை: தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் கொரொனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (6.9.21) அந்த பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுல்த்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்குச் சோதனை செய்ததில், மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது தெரியவந்ததை அடுத்து, அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்குச் சுகாதாரத் துறையினர் இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
