கோவையில் கோயில்கள், வீடுகள், வீதிகளில் விநாயகர் சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாட அனுமதிக்க கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் மனு!

கோவை: கோயில்கள், வீடுகள், வீதிகளில் விநாயகர் சதுர்த்தி சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாட அனுமதி வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோயில்கள், வீடுகள், வீதிகளில் விநாயகர் சதுர்த்தி சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாட அனுமதி வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகம் உட்பட கோவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மனுக்களைப் பெற்று துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கொண்டிருந்தார்.



இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தமிழகத்தைச் சேர்ந்த தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது ஆட்சியரிடம் ஒரு மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் கோவில்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்க சதுர்த்தி விழா நடத்த அனுமதி வேண்டும். தமிழக அரசு நிபந்தனைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விழாவை நல்லபடியாக நடத்த முழு ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதனால் தாங்கள் தயவு கூர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட அனுமதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...