கோவை கிணத்துக்கடவில் லோட்டஸ் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

கோவை: கோவை கிணத்துக்கடவில் லோட்டஸ் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை கிணத்துக்கடவில் லோட்டஸ் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் லோட்டஸ் அரிமா சங்கம், KGVB அறக்கட்டளை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து LLJ திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை இன்று நடத்தினர்.

இந்த இலவச கண் பரிசோதனை முகாமை கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் LJJ.ஜெகன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர். மேலும், கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவசமாக செய்த தர ஏற்பாடு செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு லோட்டஸ் அரிமா சங்க தலைவர் கணேசன், செயலாளர் சந்திரராஜ், பொருளாளர் பிரபு ஆகியோர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...