மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டம்


மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 9 கிராமங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தை நேஷனல் ருர்பன் மிஷன் (NRUM) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் 9 கிராம ஊராட்சிகளையும் நகர பகுதிகளுக்கு இணையாக உயர்த்திடும் வகையில் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

இத்திட்டம் செயல்படுத்த கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் திட்ட இயக்குநரை துணை தலைவராகவும் பல்துறை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டும் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நேஷனல் ருர்பன் மிஷன் கூட்டத்தில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் அவற்றின் நன்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பின்னர் பணிகள் மேற்கொள்ள ரூ.30 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளையும் வளர்ச்சியடைந்த நகர பகுதிகளுக்கு இணையான முன்னேற்றமடைந்த பகுதிகளாக மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...