கோவை: ஈமு கோழிப்பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 63 லட்சம் மோசடி செய்த உரிமையாளருக்குக் கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை 40 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
கோவை: ஈமு கோழிப்பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் 63 லட்சம் மோசடி செய்த உரிமையாளருக்குக் கோவை முதலீட்டாளர் நல நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை 40 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
கோவை, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குபேரன் ஈமு கோழி பண்ணை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 7000 ரூபாயும் ஒன்றரை இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய், போனஸ் தொகையாக 15 ஆயிரம் ரூபாயும் இருபத்தி நான்கு மாதம் கழித்து முழு தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை நம்பி கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 41 பேர் 62.51 லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட ராஜாமணி உட்பட முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை டேன்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 40 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.
கோவை, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குபேரன் ஈமு கோழி பண்ணை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 7000 ரூபாயும் ஒன்றரை இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய், போனஸ் தொகையாக 15 ஆயிரம் ரூபாயும் இருபத்தி நான்கு மாதம் கழித்து முழு தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதை நம்பி கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 41 பேர் 62.51 லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட ராஜாமணி உட்பட முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை டேன்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ரவி குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 40 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார்.