கோவை: தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
கோவை: தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
கோவை உருமாண்டம்பாளையம் மாநகராட்சி 43 -வது வார்டு ஜீவா வீதியில் வசிப்பவர் பழனி என்பவரின் மகன் 58 வயதான முருகன். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. மேலும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக உள்ளார்.
இவரது மனைவி ரங்கம்மாள், மகன் தங்கராஜ், மகள் வேல்மணி, மருமகள் கஸ்தூரி மற்றும் 2-பேத்திகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 2-நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை மழை பெய்தது. அதுவும் இரவு முழுவதும் மழை தொடர்ந்து பெய்தது.
இந்தநிலையில், இன்று காலை 7-மணியளவில் இவர்கள் வீட்டின் முன் பகுதியிலிருந்த போது வீட்டின் பின் பகுதியிலுள்ள ஓடுகள் இடிந்து சத்தத்துடன் விழுந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.