திருமண மண்டபங்களில் விதி மீறும் வாடிக்கையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் திருமண மண்டப உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இடம் கோரிக்கை.!!

பொள்ளாச்சி: திருமண மண்டபங்களில் விதி மீறும் வாடிக்கையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் திருமண மண்டப உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


பொள்ளாச்சி: திருமண மண்டபங்களில் விதி மீறும் வாடிக்கையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் திருமண மண்டப உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வரும் நிலையில், பல்வேறு துறைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் விதி மீறும் பட்சத்தில் மண்டப உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.



இதுதொடர்பாக இன்று திருமண மண்டப உதவியாளர்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பல்வேறு நிதி நெருக்கடியில் மண்டப உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மண்டப உரிமையாளர்களுக்கு அரசு அபராதம் விதித்து வருவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தவர்கள்.

இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும், மற்ற துறைகளுக்கு அளித்தது போல 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க திருமண மண்டபங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...