கோவை: கோவை அரசு மருத்துவமனை வாசலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவை அரசு மருத்துவமனை வாசலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் 30, இவர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் கோவை அரசு மருத்துவமனை முன் கத்தியைக் காட்டி மிரட்டி 2000 ரூபாய் பறித்தார்.
இந்த வழக்கில் முஜிபூர் ரகுமானை ரேஸ்கோர்ஸ் காவல்துறை கைது செய்தனர். இவரைக் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இவர் மீது கோவை நகரில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. கொலை கொள்ளை பொதுமக்களிடம் நகரில் கத்தியைக் காட்டி பல இடங்களில் அடாவடி செய்து ரவுடியாக வலம் வந்து இருப்பதாகத் தெரியவந்தது.
இவரைக் குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தின் படி நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நேற்று அவருக்குச் சிறையில் வழங்கப்பட்டது.
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் 30, இவர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் கோவை அரசு மருத்துவமனை முன் கத்தியைக் காட்டி மிரட்டி 2000 ரூபாய் பறித்தார்.
இந்த வழக்கில் முஜிபூர் ரகுமானை ரேஸ்கோர்ஸ் காவல்துறை கைது செய்தனர். இவரைக் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இவர் மீது கோவை நகரில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. கொலை கொள்ளை பொதுமக்களிடம் நகரில் கத்தியைக் காட்டி பல இடங்களில் அடாவடி செய்து ரவுடியாக வலம் வந்து இருப்பதாகத் தெரியவந்தது.
இவரைக் குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தின் படி நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நேற்று அவருக்குச் சிறையில் வழங்கப்பட்டது.