கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி - கோவை சாலை கிட்ஸ் பார்க் பள்ளி அருகே நேற்று இரவு 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு மூதாட்டியின் விவரங்கள் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் பொள்ளாச்சி - கோவை சாலை கிட்ஸ் பார்க் பள்ளி அருகே நேற்று இரவு 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நடந்து சென்ற மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு மூதாட்டியின் விவரங்கள் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.