கோவை: உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் மர்ம நபர்களால் திருடப்பட்ட யானைத்தந்தத்தை வனத்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் மர்ம நபர்களால் திருடப்பட்ட யானைத்தந்தத்தை வனத்துறையினர் மீட்டு நடவடிக்கை எடுத்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறியப்பட்டது.
அந்த யானையைக் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தினர். அப்பொழுது அந்த யானையின் ஒரு தந்தம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. யானையின் தந்தத்தைத் திருடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று வனத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பாறை இடுக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தந்தம் மீட்கப்பட்டது. யானைக்கு ஒரு தந்தம் மட்டுமே இருந்துள்ளது.
அதைத்தான் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரக தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும் அந்த தந்தத்தைத் திருடிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறியப்பட்டது.
அந்த யானையைக் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தினர். அப்பொழுது அந்த யானையின் ஒரு தந்தம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. யானையின் தந்தத்தைத் திருடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று வனத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பாறை இடுக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தந்தம் மீட்கப்பட்டது. யானைக்கு ஒரு தந்தம் மட்டுமே இருந்துள்ளது.
அதைத்தான் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரக தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும் அந்த தந்தத்தைத் திருடிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.