கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பணமில்லா பரிவர்த்தனை கருவிகள் அறிமுகம்


ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பினை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக முன்பதிவு மையத்தில் 3 புதிய கருவிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ரயில்நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதில் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு பெறும் மையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக புதிய கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கடன் அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதற்காக ஒரு இயந்திரம் செயல்பட்டு வந்த சூழலில் தற்போது மேலும் இரண்டு கருவிகள் மூலம் ரயில்வே நிர்வாகம் சேவையை துவங்கியுள்ளது.

இதனால் சில்லரைக்காக ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்பதால் அதனை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறுவதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் சாதாரண பயண சீட்டு வழங்குமிடத்திலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் மூத்த குடிமகன்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது கோவை ரயில்நிலையத்தில் முன்பதிவு மையத்தில் உள்ள 10 கவுண்டர்களில் 4 மட்டுமே இயங்கி வருவதும் சாதாரண பயணச்சீட்டு வழங்குமிடத்தில் 3 கவுண்டர்கள் மட்டுமே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...