கோவையில் ஊரடங்கு விதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் 440-பேர் மீது வழக்குப்பதிவு.!!

கோவை: கோவையில் ஊரடங்கு விதிமுறை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 440-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஊரடங்கு விதிமுறை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 440-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் எனச் சட்டத் திருத்த மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து உடன் வெளிநடப்பு செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவை மாநகரில் ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, ரேஸ் கோர்ஸ், இராமநாதபுரம், செல்வபுரம், என பொது இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுது அத்துமீறி தொற்றுநோய் பரவும் விதமாகச் செயல்பட்டது உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் காவல்துறை அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் 440-பேர் மீது ஊரடங்கு விதிமீறல் தொற்று நோய் பரவல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...