கோவை: கோவையில் ராணுவ வீரா் போல நடித்து கூகுள் பே என்ற ஆன்லைன் பண வர்த்தகம் செயலி மூலமாக ரூ.40 ஆயிரம் வரை மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை: கோவையில் ராணுவ வீரா் போல நடித்து கூகுள் பே என்ற ஆன்லைன் பண வர்த்தகம் செயலி மூலமாக ரூ.40 ஆயிரம் வரை மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை காட்டூா் பகுதியைச் சோ்ந்த சாதிக் (31), ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது செல் போனுக்கு சந்தீப் என்ற பெயரில் ஒருவா் தொடா்பு கொண்டு, தான் ராணுவ வீரா் எனவும் கேண்டீனில் பயன்படுத்தும் வகையில் தரமான வெட் கிரைண்டா் வேண்டும், எனக் கேட்டுள்ளாா். மேலும், வெட் கிரைண்டரின் மாடல், விலை போன்ற விவரங்களை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புமாறும் கூறியுள்ளாா்.
அந்த நபர் கேட்ட விவரங்களை சாதிக் அனுப்பியுள்ளாா். அப்போது அந்த நபா், பணம் அனுப்புவதில் ராணுவப் பிரிவில் பல்வேறு விதிமுறைகள் உள்ளதால், பின்னர் தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறியுள்ளாா். இதற்கு, சாதிக்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.
உடனே, அந்த நபா் கூகுள் பே மூலமாக ரூ.5 அனுப்புமாறு சொல்ல, சாதிக் ரூ.5 அனுப்பி சோதனை செய்துள்ளார். பணம் வந்து விட்டதாக கூறிய அந்த நபா், மேலும், ரூ.10 திரும்ப அனுப்பியுள்ளார். பின்னா், அந்த நபா் பணம் அனுப்பும் கூகுள் பே செயலியின் எண் விவரங்களை தனக்கு அனுப்ப வேண்டும் எனவும் அப்போது தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறி அந்த விவரங்களையும் சாதிக்கிடம் வாங்கியுள்ளாா்.
சிறிது நேரத்திலேயே, சாதிக் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுத்துள்ளார், இதைத் தொடா்ந்து சாதிக் அந்த நபரை தொடா்பு கொண்டு எனது கணக்கில் இருந்து பணம் எடுத்தீா்களா? எனக் கேட்டுள்ளார்.
அதற்கு, அந்த நபா் பரிவா்த்தனையில் தவறு நடந்துவிட்டது. நீங்கள் பணம் இருக்கும் வேறு வங்கிக் கணக்கில் இருந்து காா்டு விவரங்களை அனுப்புங்கள், மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் எனக் கூறியுள்ளாா்.
அவர் கேட்ட அனைத்து விவரங்களையும் சாதிக் அனுப்பியதும், அந்த நபா் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து மீண்டும் ரூ.29 ஆயிரத்து 700 எடுத்துக் கொண்டாா். மீண்டும் அந்த நபரை தொடா்பு கொண்ட போது, மீண்டும் தவறு ஏற்பட்டு விட்டது சென்று சமாளித்துள்ளார். இதை ராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்து விடவேண்டாம். எனக்கு வேலை போய்விடும் என கெஞ்சி சாதிக்கின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு வரும் ரகசிய எண் விவரங்களை கேட்டு வாங்கியுள்ளாா்.
அதிலிருந்து மீண்டும் ரூ.9 ஆயிரத்து 990 எடுத்து என 3 முறையில் ரூ.40 ஆயிரத்தை அந்த நபா் நூதனமாக பறித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த சாதிக் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்ததன் பேரில் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை காட்டூா் பகுதியைச் சோ்ந்த சாதிக் (31), ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது செல் போனுக்கு சந்தீப் என்ற பெயரில் ஒருவா் தொடா்பு கொண்டு, தான் ராணுவ வீரா் எனவும் கேண்டீனில் பயன்படுத்தும் வகையில் தரமான வெட் கிரைண்டா் வேண்டும், எனக் கேட்டுள்ளாா். மேலும், வெட் கிரைண்டரின் மாடல், விலை போன்ற விவரங்களை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புமாறும் கூறியுள்ளாா்.
அந்த நபர் கேட்ட விவரங்களை சாதிக் அனுப்பியுள்ளாா். அப்போது அந்த நபா், பணம் அனுப்புவதில் ராணுவப் பிரிவில் பல்வேறு விதிமுறைகள் உள்ளதால், பின்னர் தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறியுள்ளாா். இதற்கு, சாதிக்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.
உடனே, அந்த நபா் கூகுள் பே மூலமாக ரூ.5 அனுப்புமாறு சொல்ல, சாதிக் ரூ.5 அனுப்பி சோதனை செய்துள்ளார். பணம் வந்து விட்டதாக கூறிய அந்த நபா், மேலும், ரூ.10 திரும்ப அனுப்பியுள்ளார். பின்னா், அந்த நபா் பணம் அனுப்பும் கூகுள் பே செயலியின் எண் விவரங்களை தனக்கு அனுப்ப வேண்டும் எனவும் அப்போது தான் பணம் அனுப்ப முடியும் எனக் கூறி அந்த விவரங்களையும் சாதிக்கிடம் வாங்கியுள்ளாா்.
சிறிது நேரத்திலேயே, சாதிக் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுத்துள்ளார், இதைத் தொடா்ந்து சாதிக் அந்த நபரை தொடா்பு கொண்டு எனது கணக்கில் இருந்து பணம் எடுத்தீா்களா? எனக் கேட்டுள்ளார்.
அதற்கு, அந்த நபா் பரிவா்த்தனையில் தவறு நடந்துவிட்டது. நீங்கள் பணம் இருக்கும் வேறு வங்கிக் கணக்கில் இருந்து காா்டு விவரங்களை அனுப்புங்கள், மொத்த பணத்தையும் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் எனக் கூறியுள்ளாா்.
அவர் கேட்ட அனைத்து விவரங்களையும் சாதிக் அனுப்பியதும், அந்த நபா் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து மீண்டும் ரூ.29 ஆயிரத்து 700 எடுத்துக் கொண்டாா். மீண்டும் அந்த நபரை தொடா்பு கொண்ட போது, மீண்டும் தவறு ஏற்பட்டு விட்டது சென்று சமாளித்துள்ளார். இதை ராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்து விடவேண்டாம். எனக்கு வேலை போய்விடும் என கெஞ்சி சாதிக்கின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு வரும் ரகசிய எண் விவரங்களை கேட்டு வாங்கியுள்ளாா்.
அதிலிருந்து மீண்டும் ரூ.9 ஆயிரத்து 990 எடுத்து என 3 முறையில் ரூ.40 ஆயிரத்தை அந்த நபா் நூதனமாக பறித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த சாதிக் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்ததன் பேரில் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.