கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்காகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க இன்று தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது.
இதற்கு அதிமுக எம்.எல்.ஏ,க்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ,க்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ் தலைமையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களை காவல்துறை கைது செய்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பது தொடர்பான சட்ட மசோதாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்காகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க இன்று தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது.
இதற்கு அதிமுக எம்.எல்.ஏ,க்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ,க்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ் தலைமையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களை காவல்துறை கைது செய்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பது தொடர்பான சட்ட மசோதாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.