கோவை: வால்பாறையில் ஒற்றை காட்டு யானை வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் ஒற்றை காட்டு யானை வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் தேயிலைத் தோட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் சுற்றிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தவரை காட்டு யானை மிதித்துக் கொன்ற சோக சம்பவம் நடைபெற்றது. வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானையை விரட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் தொடர்ந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளில் சுற்றி வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு மோகன் என்பவரின் வீட்டிற்கு இரவு 9 மணிக்கு வந்த காட்டு யானை அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து அருகில் உள்ள மரத்தையும் ஒடித்து சேதப்படுத்தியது.
இதையடுத்து, தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து இந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியிலேயே வலம் வருவது தொழிலாளர்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மீண்டும் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் இந்த ஒற்றை காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதியில் கொண்டு போய்விட வேண்டும் என்று அப்பகுதி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் தேயிலைத் தோட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் சுற்றிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தவரை காட்டு யானை மிதித்துக் கொன்ற சோக சம்பவம் நடைபெற்றது. வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானையை விரட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் தொடர்ந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளில் சுற்றி வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு மோகன் என்பவரின் வீட்டிற்கு இரவு 9 மணிக்கு வந்த காட்டு யானை அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து அருகில் உள்ள மரத்தையும் ஒடித்து சேதப்படுத்தியது.
இதையடுத்து, தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து இந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியிலேயே வலம் வருவது தொழிலாளர்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மீண்டும் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் இந்த ஒற்றை காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதியில் கொண்டு போய்விட வேண்டும் என்று அப்பகுதி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.