கோவை: மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான கோவை மருதமலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாகக் குட்டிகளுடன் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது.
வனப்பகுதியிலிருந்து உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் மறைந்து விளைநிலங்களை உண்டு சேதப்படுத்தி வருவது வழக்கம்.
அவ்வாறு நேற்று முன்தினம் இரவு 10-மணி அளவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின் புறத்திலுள்ள வனத்தை ஒட்டிய குட்டையில் சுமார் மூன்று குட்டிகளுடன் யானைக்கூட்டம் மருதமலை அடிவாரம் வழியாக நாயக்கன் பாளையம் பகுதியில் சென்றது.
அங்குப் பயிரிடப்பட்டிருந்த சோளம் கம்பு உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. விவசாய தோட்டத்தில் கட்டி இருந்த கூடாரத்தை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியது அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்துச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து சென்றது.
வனத்துறையினர் யானைகளைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர். மருதமலை அண்ணா பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வோர் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் யானைகள் நாள்தோறும் முகாம் இடுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான கோவை மருதமலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாகக் குட்டிகளுடன் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது.
வனப்பகுதியிலிருந்து உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் மறைந்து விளைநிலங்களை உண்டு சேதப்படுத்தி வருவது வழக்கம்.
அவ்வாறு நேற்று முன்தினம் இரவு 10-மணி அளவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின் புறத்திலுள்ள வனத்தை ஒட்டிய குட்டையில் சுமார் மூன்று குட்டிகளுடன் யானைக்கூட்டம் மருதமலை அடிவாரம் வழியாக நாயக்கன் பாளையம் பகுதியில் சென்றது.
அங்குப் பயிரிடப்பட்டிருந்த சோளம் கம்பு உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. விவசாய தோட்டத்தில் கட்டி இருந்த கூடாரத்தை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியது அங்கிருந்த தண்ணீர் தொட்டியை உடைத்துச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து சென்றது.
வனத்துறையினர் யானைகளைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர். மருதமலை அண்ணா பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வோர் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.