கோவையில் நள்ளிரவில் வாலிபர் வெட்டி படுகொலை - போலீசார் தீவிர விசாரணை!

கோவை: கோவை அருகே நள்ளிரவில் நண்பர்களைப் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே நள்ளிரவில் நண்பர்களைப் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிய வாலிபரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரையை அடுத்த போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரமேஷ் (23). இவர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் சி.என்.சி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இரவு வெளியே சென்ற ரமேஷ் நண்பர்களைப் பார்த்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பாலக்காடு எல்.என்.டி பைபாஸ் வழியாக வீட்டுக்குச் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது, போடிபாளையம் அருகே வந்த போது அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் ரமேஷின் கழுத்து, வயிறு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீசார், ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...