கோவை மாவட்டத்தில் கம்பு பயிரிட்டால் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் - வேளாண்மை திட்ட இயக்குநர் தகவல்..!

கோவை: கோவையில் கம்பினை அதிகம் பயிரிடுவதின் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்மை திட்ட இயக்குநர் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கம்பினை அதிகம் பயிரிடுவதின் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என கோவை மாவட்ட வேளாண்மை திட்ட இயக்குநர் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

வீரியம், ஒட்டு போன்ற பல்வேறு ரகங்களில் கம்பு பயிர்சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடை முறையில் உள்ளது.

ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீட்டர் இடைவெளியும் விட வேண்டும். மானாவாரியில் 12.5 டன், (ஒரு ஏக்டருக்கு), தழைச்சத்து 70 கிலோ, மணிச்சத்து 20 கிலோ அனைத்தும் அடியுரமாக இட வேண்டும். கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும், ஒருங்கிணைந்த பயிர் நோய் மற்றும் பூச்சி பாதுகாப்பு முறையில் குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை கம்பு தரும். தானியங்கள் கடினமாகும்.

அப்போது, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். இது போன்ற சில முறைகளில் கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம். இவ்வாறு சித்ராதேவி கூறினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...