மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்தில் உள்ள அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அந்த குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, வடக்கு மண்டலம், வார்டு எண்- 44, நல்லாம்பாளையம் சாலை, அன்னையப்பன் வீதியில் பிரியா குடிநீர் சப்ளை நிறுவனம் குடிநீர் திருடுவதாக ராமசாமி நகர் 2 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் அப்பதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறைகேடாக அனுமதி பெறாமல் தண்ணீர் திருடிவருவது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் என்.சண்முகம் என்பவர் இரண்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டர் பொருத்தி தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது உறுதியானதையடுத்து, வீட்டு உபயோகத்திற்காக இணைப்பு பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தியதால் இரண்டு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சாலையின் குறுக்கே குழாய் பதித்து குடிநீர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய குழாயும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...